Sunday, November 7, 2010

குழந்தைகள் அலுவலகம் பெயரில் விபசாரம்


ஜம்மு: காஷ்மீரில் குழந்தைகள் முன்னேற்ற அலுவலகம் பெயரில் செயல்பட்டு வந்த அலுவலகத்தில் விபசாரம் நடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இங்குள்ள படோலி மங்கோட்ரைன் பகுதியில் குழந்தைகள் வளர்ச்சி முன்னேற்ற திட்டம் என்ற பெயரில் ஒரு பெண் அலுவலகம் நடத்தி வந்தார்.


இத்துடன் வீடும் இணைந்திருக்கிறது. ரஜினிதேவி என்பவர் நடத்தி வந்தார். இங்கு சட்ட விரோத செயல் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இங்கு விபசாரம் செய்த ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் ஒருவர் உள்பட மற்றும் 4 பெண்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


டாக்டர் தோடா மாவட்டத்தில் பதேர்வோபகுதியை சேர்ந்த பிரகாஷ்வாசீர் என தெரியவந்தது. இந்த அறையில் மது பாட்டல்களும் கைப்பற்றப்பட்டன.

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails