Sunday, July 3, 2011

இரவுநேர உடையணிந்து கவர்ச்சிகரமாக ஸ்கைபில் பேசி பணத்தை கறந்த பெண்: திடுக்கிடும் தகவல் !

ஸ்கைபில் பேசி ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை கறந்த பெண்: திடுக்கிடும் தகவல் !

 

வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என அறியப்படுகிறது. இப் பெண்ணின் பெயர் தர்ஷனா எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து முதலில் பேஸ் புக் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தும் இவர் பின்னர் ஸ்கைப் ஊடாக சுவிஸ் லண்டன் எனப் பல நாடுகளில் உள்ள தமிழர்களைத் தொடர்புகொண்டு தான் தாய் தந்தை இழந்தவர் என்றும் பிரித்தானியாவுக்கு மாணவர் விசாப் பெற முயற்சிப்பதாகத் தெரிவித்து, அதற்காக வங்கியில் பணத்தைப் போடால் தான் இலகுவாக விசாவைப் பெறமுடியும் எனக் கூறி பலர் தலையில் முழகாய் அரைத்துள்ளார். இவர் ஸ்கைப் ஊடாகப் பேசும்போது இரவுநேர உடையணிந்தும், மிகவும் கவர்ச்சிகரமாகவும் பேசுவதால், பலர் நம்பி பணத்தை வாரி இறைத்துள்ளனர்.

இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார். குறித்த பெண் தன் கைகளை தானே வெட்டி காயப்படுத்தி அதனை வெப் காம் கமரா மூலம் காட்டிக் கூட சிலரிடம் பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி பலர் இவருக்கு பணத்தைக் கொடுத்துள்ளனர். வங்கியில் பணத்தைப் போட்டுக் காட்டி, மாணவர் விசா கிடைத்தபின்னர் அப்பணத்தை திருப்பித் தருவேன் என்றும் இவர் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பிய பலர் இவரது வங்கிக் கணக்கில் பணத்தை இட்டுள்ளனர். பணம் கிடைத்தவுடன் குறித்த நபர்களுடனான தொடர்பை இவர் கட் பண்னிவிடுவார். ஸ்கைப் திரையில் தோன்றவும் மாட்டார் ! இதுவே இவரின் வாடிக்கை !


யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி என்றும் கூறப்படுகிறது. இப் பெண்ணின் கணக்குக்கு வரும் பணத்தை உடனடியாக தனது கணக்குக்கும் மாற்றும் நபரும் இவரே எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நபரின் பெயர் ஜெய்சன் என்றும் சொல்லப்படுகிறது. 

கட்டிலில் படுத்திருந்து, கைகளை பிளேடால் வெட்டி, இரவு நேர உடையணிந்து, குளைந்து பேசி, இவ்வாறு வித்தியாசமான கோணங்களில் இவர் பணப்பறிப்பு கொடிகட்டிப் பறந்துள்ளது. தற்போதும் ஒரு நபர் இவர் கதையில் ஏமாந்து, கொழும்பில் உள்ள தனது உறவினர் ஒருவரூடாக இப் பெண்ணின் வங்கிக் கணக்கில் பணத்தைப் போடச் சொல்லியுள்ளார். குறிப்பிட்ட உறவினர் பணத்தை வங்கியில் போடச் சென்றவேளை அவர் அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் சுமார் 1கோடியே 40 லட்சம் காசு இடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகமுற்ற அவர் விடையத்தை பிரித்தானிய நபருக்கு தெரிவிக்க இப் பெண் குறித்து அவர் சில விசாரணைகளை நடத்தியுள்ளார். இதேவேளை இப் பெண்ணால் ஏற்கனவே ஏமாந்த மற்றுமொரு நபரையும் இவர் எதேச்சையாகச் சந்தித்துள்ளார்.

இவர்கள் கலந்துரையாடலில் வெளியான செய்திகளையே நீங்கள் தற்போது பார்க்கிறீர்கள். ஊரில் பல குடும்பங்கள் கஷ்டப்பட்டும், பல சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ சொற்பமான சிலரே முன்வருகின்றனர். ஆனால் அழகா இருந்தால் இல்லை கவர்ச்சி வார்த்தைபேசினால் மயங்கி உதவ பலர் இருக்கிறார்கள் போலும் !




source:athirvu
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails