Monday, April 11, 2011

பாராளுமன்ற கூட்டத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி

இந்தோனேஷியாவில் பாராளுமன்ற கூட்டத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.
ஐகார்த்தா, ஏப். 11-
 
இந்தோனேஷியாவில் பாராளுமன்ற கூட்டத்தின் போது எம்.பி. ஒருவர் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்தார்.
 
இந்தோனேஷியாவை சேர்ந்தவர் அரிபின்டோ. இவர் பி.கே.எஸ். கட்சியின் எம்.பி. ஆக உள்ளார். தற்போது அங்கு பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் அவர் கலந்து கொண்டார். கூட்டத்தில் விவாதம் நடந்தது. மற்ற எம்.பி.க்கள் காரசாரமாக விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
 
ஆனால் அரிபின்டோ மட்டும் தான் எடுத்து சென்ற கையடக்க கம்ப்யூட்டரில் நிர்வாண படங்களை மறைத்து வைத்து பார்த்து ரசித்தார். இக்காட்சி பாராளு மன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவானது.
 
மேலும், இது அங்கிருந்து ஒளிபரப்பாகும் இன்டர்நெட்டிலும் ஒளிபரப்பப்பட்டது. இதை அந்நாட்டு பத்திரிகைகளும் வெளியிட்டன. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு மக்கள் அரிபின்டோ எம்.பி. குறித்து சரமாரியாக வசை பொழிந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எம்.பி.யின் இச்செயல் வெட்ககேடானது. இந்த தண்டனைக்காக அவரை சவுக்கால் அடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மற்றொரு தரப்பினரோ இவரை கல்லால் அடித்து சித்ரவதை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
தற்போது இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து பாராளுமன்ற கவுன்சில் துணை தலைவர் நுதிர் மன்முனீர் கருத்து கூறியுள்ளார்.
 
அவரது இந்த செயல் பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும், மதிப்பையும் குலைப்பதாக உள்ளது. எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது நல்லது. இல்லாவிட்டால் அவர் எம்.பி. பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டை அரிபின்டோ எம்.பி. திட்டவட்டமாக மறுத்துள்ளார். இ-மெயிலை திறந்துபோது ஆபாச படங்கள் வெளியாகி விட்டன. நான் வேண்டுமென்றே அவற்றை பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

source:maalaimalar 
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails