Wednesday, January 19, 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள முதல் அங்கீகாரம்! இராஜதந்திர வெற்றி



நாடுகடந்த தமீழீழ அரசாங்கத்துக்கு உலக நாடுகளில் முதலாவதுஅங்கீகாரமாக புதிதாக அமையவுள்ள தென்சூடானிய அரசாங்கத்தின்அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சூடானுடன் தாம் இணைந்திருக்க விரும்பவில்லை என்பதைபுதியதொரு தோ்தலொன்றின் மூலம் வெளிக்காட்டிதென் சூடானியமக்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்த சூடானிய மக்கள் கிளர்ச்சிஇயக்கத்துடன்நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில்பலமான தொடர்புகளைப் பேணி வந்திருந்தனர்.

அதன் காரணமாக தெற்கு சூடான் சுதந்திரம் பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவெனநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ முறையில்அழைக்கப்பட்டுள்ளதுடன்அவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்தும் வழங்கப்படவுள்ளது.

அதன் காரணமாக உலக நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைஉத்தியோகபூர்வமாக அங்கீகரித்த முதலாவது நாடு என்ற பெருமையை தெற்கு சூடான்அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ளதுஅது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்செயற்பாடுகளில் ஒரு திருப்பு முனையாகவும்மைல் கல்லாகவும் அமையவுள்ளதாகஅரசியல் அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails