Wednesday, September 8, 2010

பைக்கில் புகுந்து கண்ணாமூச்சி காட்டி பதற வைத்த பாம்பு


ப.வேலூர்: பைக்கினுள் பாம்பு புகுந்ததால், அந்த பைக் தனித்தனியாக பிரித்துப்போடப்பட்டது. மூன்று மணி நேரத்துக்கு பின், பைக்கின் இண்டிகேட்டரில் இருந்த பாம்பை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

ப.வேலூரை சேர்ந்த சேகர் என்பவர் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளரக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் ஒரு மணியளவில் மருத்துவமனைக்கு சென்ற அவர், பைக்கை மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்துக்கு பின், அவர் பைக்கை எடுக்க வந்தபோது, அங்கிருந்தவர்கள் பைக்கினுள் சிறிய பாம்பு புகுந்துள்ளது எனத் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த சேகர் பைக்கை அப்படியும்- இப்படியும் ஆட்டி பாம்பை தேடினார். பாம்பு வெளியே வராததால், மெக்கானிக்கை வரவழைத்து பைக் பாகங்களை தனித்தனியாக பிரித்தனர். எதிலும் பாம்பு தென்படாததால், "பாம்பு வெளியேறியிருக்கும்' என, மெக்கானிக் தெரிவித்துள்ளார்.

பயத்தில் பைக்கை எடுக்க சேகர் தயக்கம் காட்டினார். அப்போது, பைக்கின் பின்பக்க இண்டிகேட்டரில் இருந்து பாம்பு எட்டிப்பார்த்தது. அங்கு நின்றிருந்தவர்கள் பாம்பை அடித்துக் கொன்றனர். பைக்கில் புகுந்து மூன்று மணிநேரம் ஆட்டம் காட்டிய பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails