Friday, February 22, 2008

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

 
கீழே  அழகிய நபியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவதை படியுங்கள்.முழுமையாக படித்தவுடன் அதன் விளக்கத்தை பார்க்கலாம்
 
 
 
 
 
பாகம்
1, அத்தியாயம் 8, எண் 371
 

நபி

(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.
நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்
.
இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்
.

நாங்கள்

(கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
"
அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார். //

 

இப்பொழுது நீங்கள் இந்த முழு ஹதீசையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.நல்லது வாருங்கள் நாம் ஜிஹாதிகளின் முகமூடியை கிழிப்போம்.

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள்.

'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்'

அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம்

 

 

மேலே உள்ள அனைத்தும் யாரோ முஸ்லீம் இன விரோதிகள் இஸ்லாமை பற்றி எழுதியதல்ல.அருமை நபியின் வரலாறை அழகாக தொகுத்த புகாரி அவர்கள் புத்தகத்தில் சரியான பின்தொடர்பாளர்கள் வரிசைபடி உள்ள ஹதீஸ்

இதில் கைபர் என்கிற ஊருக்குள் அந்த அப்பாவி மக்கள் போரை எதிர் பார்க்காத வேளையில் உள்ளே புகுந்து பலவந்தமாக கைப்பற்றி அங்குள்ள பொருட்களை கொள்ளை அடித்துவிட்டு,அங்கு எதிர்த்து போரிட்ட ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை அடிமைகளாக கொண்டு வந்து அவர்கள் துணிகடையில் துணி தேர்ந்தெடுப்பதைப்போல் கணவணையும்,தகப்பனையும் இழந்த பெண்களை தங்கள் போகப்பொருளாக்கிய கெவலமான காட்சியைத்தான் நீங்கள் படித்தீர்கள்.

இவ்வளவுக் கேவலமான ஒருவர் இறைவனின் நபி என்று ஏற்றுக்கொள்பவன் உண்மையாக நல்ல மனிதனாக இருக்க முடியுமா?இதன் விடையை உங்களிடமே விட்டு விடுகிறேன்

1 comment:

Irai Adimai said...

அன்புடன் தெய்வ மகனுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்

முதலில் உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்கு புரியவில்லை.(பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது? )
இதில் எண்ணக் கொடுமையை கண்டுவிட்டீர்கள்.
சரி விவாதிப்பதற்கு முன்னால் பண்டைக் கால போர் முறைகளையும் அதில் போரிலே ஜெயித்தவர்கள் தோற்றவர் களிடம் நடந்து கொள்ளும் முறைகளையும் இன்னும் அந்த கால வாழ்க்கை முறையையும் கொஞ்சம் வரலாறுகளை புரட்டிப் பார்த்து படித்து விட்டு இது போன்ற விவேகமான விவாதங்களுக்கு வாருங்கள்.இன்னும் அந்த ஹதீஸ் எண் அறிவிப்பள்ளர் பெயர் எல்லாமும் குறிப்பிட வேண்டியது அவசியம் உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறோம்.உங்கள் சந்தேகங்களையும் தீர்க்க கடமைப் படிருக்கிறோம்.
அன்புடன்
இறை அடிமை

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails