கபட நாடகமாடிய காதலன் கழுத்தை நெரித்து கொன்ற பின் உறவு !
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பிரித்தானியா லங்கஷியர் பகுதியில், ஒரு வீட்டின் கதவை தீயணைக்கும் படையினர் அவசரமாக உடைக்கின்றனர். அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் அக்கம் பக்கத்தினர் திகைத்தனர் ! அவசரமாக பராமெடிக்ஸ் என்னும் அதி தீவிர சிக்கிசைப் பிரிவினர் உடைக்கப்பட்ட கதவுகள் ஊடாக உள்ளே சென்று அனா என்னும் 23 வதுப் பெண்ணைக் காப்பாற்ற முயல்கின்றனர். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்துபோனார். அவரைக் கொண்றதாக அவரின் காதலன் டானியல் கைதுசெய்யப்படுகிறார். ஆனால் எல்லொரும் கூறுவது போல அவர் தான் கொலைசெய்யவில்லை என்று கூறவில்லை. மாறாக புதிதாக ஒரு கதையைக் கூறி பிரித்தானிய பொலிசாரையும், நீதிபதிகளையும் குழப்பிவிடார். அவர் கூறுவதில் ஞாயம் இருக்கிறதா இல்லையா என்று எல்லோரும் வாதிட்டனர். பிரித்தானிய பத்திரிகைகளில் முதல் இடம் பிடித்த இக் கொலை வழக்கு பலரால் விவாதிக்கப்பட்டது. அது என்ன தெரியுமா ? மாட்டருக்கு வருவோம் !
மாரித் தவக்கை தன்வாயால் கெடும் என்பதுபோல, இவரது வழக்கில் தற்போது புதுத்திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் டானியல் தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் தான் தனது காதலியை வேண்டும் என்றே கழுத்தை நெரித்துக் கொண்றதாகத் தெரிவித்துள்ளார். தனது காதலி தன்னுடன் இருக்கும்போது, வேறு ஒரு ஆணுடன் பழகி வந்ததாகவும் அதனைத் தான் அறிந்து கோபம் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டானியலின் உற்ற நண்பர் உடனே இதைப் பொலிசாருக்கு போட்டுக்கொடுத்துவிட்டார். அதனை இரகசியமாக பதிவுசெய்த பொலிசார் மேற்படி டானியலை அழைத்து விசாரனை நடத்தியுள்ளனர். அவ்விசாரணையில் டானியல் தான் வேண்டுமென்றே தன் காதலியைக் கொலைசெய்ததாக தற்போது ஒப்புகொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கு வெகுவிரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வழக்கு இம் மாதம் கோட்டில் எடுக்கப்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படலாம் என லங்கஷியர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment