Wednesday, August 3, 2011

தனது 'கணவன்' உண்மையில் ஒரு பெண் எண்பதை அறிந்த மணமகள்


ஆணாக நடித்து திருமணம் செய்ய முயன்ற பெண்: மணமகள் அதிர்ச்சி

திருமண வைபவத்தின்போது தனது 'கணவன்' உண்மையில் ஒரு பெண் எண்பதை அறிந்த மணமகள் அத்திருமணத்தை நிறுத்திய சம்பவமொன்று இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்திருமண வைபவம் நடைபெறும்போது  'மணமகன்' தனது உறவினர்கள் எவரையும் அழைத்துவரவில்லை. றியோ  என்று அழைக்கப்பட்ட இந்நபர் தன்னைப் பற்றிய எந்த ஆவணங்களையும் கையளிக்காமல் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டதாக இந்தோனேஷிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபரின் குரல், திடீரென பெண்களது குரலைப்போன்று மாறியபோது சந்தேகம் அதிகரித்ததாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் ஆண்களுக்குரிய உடலமைப்புடன் காணப்பட்டதாகவும் மணப்பெண் நூராணிக்கு 7 மாதங்களுக்கு முன் அறிமுகமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றியோ, ஓர் ஆண் என கண்டறியப்பட்டதையடுத்து, திருமணத்தை நிறுத்துவதால் உறவினர்கள் முன் ஏற்படும் சங்கடத்தை தவிர்ப்பதற்காக நூராணியின் முன்னாள் காதலரை மணமகனாக தெரிவுசெய்து திருமணத்தை நடத்த உறவினர்கள் தீர்மானித்தனர்.

-TamilMirror


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails