Tuesday, June 7, 2011

இலங்கைப் பூசாரி செக்ஸ் ஆசை

இலங்கைப் பூசாரி செக்ஸ் ஆசை: கம்பி எண்ணும் நிலையில் !

 

இலங்கையைச் சேர்ந்த பூசாரி ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்டதாக அவுஸ்திரேலியாவில் கைதாகியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பூசகரான பிரேம்காந்தன் ராஜரட்ண சர்மா, Carrum Downs என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் பணிபுரிந்துள்ளார். 2004 ம் ஆண்டு அளவில் ஆலயத்துக்கு பூசைக்குச் சென்ற 23 வயதுடைய பெண் சில சங்கடங்களில் இருந்தாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட இப் பெண்ணின் பிரச்சனைகளை தான் தீர்த்துவைப்பதாகக் கூறி, முதலில் ஜோசியம் பார்க்கவேண்டும் எனச் சொல்லி, அவர் அப் பெண்ணை தனியான அறை ஒன்றுக்குள் கொண்டுசென்று, தவறான செயலில் ஈடுபட்டுள்ளார். இதே போல 2009ம் ஆண்டு தன்னோடு தவறாக நடக்க முயற்சித்ததாக மேலும் ஒரு பெண் அவுஸ்திரேலியப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

இவ்விரு பெண்களும் கொடுத்த புகார்களில் பூசாரி பற்றிச் சொல்லப்பட்ட விடையங்கள் ஒற்றுமையுடன் காணப்பட்டதால், பொலிசார் பூசாரியைக் கைதுசெய்து விசாரணை நடத்தியுள்ளனர். 2009ம் ஆண்டு பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்ணை பூசாரி பலவந்தமாக முத்தமிட முனைந்துள்ளார் என அரச தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். பிரேம்காந்தன் ராஜரட்ண சர்மாவின் வக்கீல் பேசும்போது, பிரதிவாதியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அவரை நாடு கடத்தவேண்டாம் எனத் தெரிவித்தார். குற்றவாளி குற்றங்களை ஒப்புக்கொள்வதாகாவும் வக்கீல் மேலும் தெரிவித்தார்.

ஆனால் பிராங்ஸ்டன் மஜிஸ்திரேட் நீதிபதி அதனை ஏற்க மறுத்திவிட்டார். ஒரு குருக்கள் அல்லது மத போதகர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சர்மா கெடுத்துவிட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 18 மாத சிறைத் தண்டணை வழங்கித் தீர்பளித்துள்ள பிராங்ஸ்டன் மஜிஸ்திரேட் நீதிபதி, ஆண்மீகத்தில் அல்லது பொது இடங்களில் பூஜைகளில் ஈடுபட அவருக்கு 2 வருடத்துக்கு தடை விதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்


source:athirvu


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails