Wednesday, December 14, 2011

மொபைலில் ஆசிரியையின் குளியல் படம்

பாத்ரூமில் செல்போனை பொருத்தி ஆசிரியை குடும்பத்தினர் குளிப்பதை படம் பிடித்த பாலிடெக்னிக் மாணவர்
 

பாத்ரூமில் செல்போனை பொருத்தி ஆசிரியை குடும்பத்தினர் குளிப்பதை படம் பிடித்த பாலிடெக்னிக் மாணவர்

திசையன்விளை, டிச.14-
 
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியலறையில் ஆசிரியையின் கணவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெளிச்சத்துக்காக வைக்கப்பட்டு இருந்த `வெண்டிலேட்டர்` ஜன்னலில் ஒரு கேமரா செல்போன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனே அந்த செல்போனை எடுத்து `மெமரி கார்டில்` பதிவான காட்சிகளை கம்ப்ïட்டரில் போட்டு பார்த்தார். அப்போது, ஆசிரியை உள்பட அவருடைய குடும்பத்தினர் குளித்த காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் அந்த செல்போன், பக்கத்து வீட்டை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் முத்துவிஜய் (வயது 18) என்பவருடையது என்பது தெரியவந்தது.
 
இது குறித்து ஆசிரியையின் கணவர் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜுவிடம் புகார் செய்தார்.அதன் பேரில், திசையன்விளை போலீசார் விசாரணை நடத்த போலீஸ் டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முத்து விஜயும், அவருடைய நண்பர்களான திசையன்விளையை சேர்ந்த சுதாகர் (18), அமுதன் (22) ஆகியோரும் சேர்ந்து, ஆசிரியையின் வீட்டு குளியலறையில், ரகசியமாக கேமரா செல்போனை வைத்து படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அமுதன் டிப்ளமோ படித்து முடித்துள்ளார்.சுதாகர் தனியார்கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

source:maalaimalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails