Thursday, January 10, 2008

"கிறிஸ்தவ பிஷப்" ஆன முஸ்லீம்

"கிறிஸ்தவ பிஷப்" ஆன முஸ்லீம்

பிஷப் ஜான் சுபானுடைய சாட்சி

இதை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க
: http://www.answering-islam.org/Testimonies/subhan.html
இங்கே இந்த சாட்சி சுருக்கமாக தமிழில் கொடுக்கிறோம்.

இந்தியாவில் ஒரு மெத்தடிஸ்ட் பிஷப்பாக மாறுவதற்கு முன் சுபான் ஒரு சஃபி முஸ்லீமாக இருந்து

, மௌலவியாக ஆவதற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு இருந்தார் .அந்தப் பள்ளியில் அவருடைய ஆலோசகர்கள் கிறிஸ்தவர்கள் மீது நடத்தும் தாக்குதல்களைக் குறித்து கேள்விப்படுவது வழக்கமாக இருந்தது .

ஒரு நாள் வகுப்பிலிருந்து சுபான் திரும்பிக்கொண்டிருந்த வழியில் ஒரு துண்டு காகிதம் காற்றில் பறந்து வந்து அவர் முன் விழுந்தது

. அது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பற்றி கூறும் மத்தேயு சுவிசேஷத்தின் ஒரு பகுதியாக இருந்தது .

"

என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் "இந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப படித்தார் .

இது அவருக்கு பெரிய வியப்பைக்கொடுத்தது

.ஏனென்றால் "இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை ,அவருடைய சாயல் யூதாஸ் மீது விழுந்தது .யூதாஸ் தான் சிலுவையில் அறையப்பட்டான் என்றும் ,இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே இறைவன் தன் அளவில் உயர்த்திக்கொண்டான் என்றும் " அவர் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தார்.

சுபான் அந்த ஒரே வரியை திரும்ப திரும்ப வாசித்தார்

."இது யூதாஸின் வார்த்தை அல்ல " ஏன் தேவன் அவனைக் கைவிட்டார் என்று யூதாஸ் அறிந்திருப்பான். இந்த வார்த்தை கண்டிப்பாக ஒரு மோசமான மனிதனுடைய வார்த்தையாகவும் இருக்க முடியாது .இவை ஒரு நல்ல மனிதனின் வார்த்தையாகவே இருக்க முடியும் .ஒரு நல்ல மனிதன் தான் இறைவனை நோக்கி இப்படி கேட்க முடியும் ."என் தேவனே,என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் "? இப்படியாக சுபான் தனக்குள்ளாகவே பேசிக்கொண்டார் .

உடனே

,அவர் கண்டிப்பாக யூதாஸ் அல்ல இயேசுகிறிஸ்துதான் சிலுவையில் மரித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் .இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.

சுபான் தன்னுடைய வெளிப்பாட்டை தன்னோடு கூட இஸ்லாமிய பள்ளியில் இருந்த தன் சக மாண்வர்களோடு பகிர்ந்து கொண்டார்

. ஒரு நாள் வகுப்பில் பேராசிரியர் கிறிஸ்தவர்களை தாக்குவது குறித்து தீவிரமாக இருந்தார்.அப்பொழுது ஒரு மாணவன் கையை உயர்த்தி நம்முடைய வகுப்பில் ஒரு கிறிஸ்தவன் இருக்கிறான் என்று சொல்லி சுபானை கைகாட்டினான் ."நீ ஒரு கிறிஸ்தவனா" என்று ஆசிரியர் கேட்ட போது " இயேசு என்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று விசுவாசிக்கிறேன்" என்று சுபான் கூறினார்.

உடனடியாக

Faculty meeting கூட்டப்பட்டது .சுபானிடம் விசாரணை நடந்தது .புதிய விசுவாசியாக இருந்தாலும் ,மனித புரிந்துகொள்ளுதலுக்கு அப்பால் பரிசுத்த ஆவியானவர் சுபானுக்கு ஞானத்தைக் கொடுத்தார். அவர் வாயிலிருந்து பிறந்த பதில்கலை கண்டு Faculty meeting- ல் இருந்த அனைவரும் அசந்து போனார்கள்.இறுதியாக சுபான் நமது கொள்கைக்கு விரோதி என்று சொல்லி சுபானை பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள் .தேவனுக்காக பாடனுபவிக்கும் சந்தர்ப்பங்களில் வர்ணிக்க முடியாத சந்தோஷம் இருதயத்தை நிரப்பியதாக சுபான் கூறினார் .

அதற்கு பிறகு வேதாகம கல்லுரியில் படித்து பிறகு அவர் இந்தியாவில் ஒரு மெத்தடிஸ்ட் பிஷப் ஆனார்

 

http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_4698.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails