Wednesday, January 23, 2013

மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: முஸ்லிம்கள் 42 பேர் பலி

ஈராக் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: ஷியா முஸ்லிம்கள் 42 பேர் பலி

ஈராக் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: ஷியா முஸ்லிம்கள் 42 பேர் பலி
பாக்தாத், ஜன. 23-

ஈராக்கில் சன்னி, ஷியா முஸ்லிம் தீவிரவாதிகளிடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. ஈராக்கின் வடக்குப் பகுதி துஸ் கொர்மாடு என்னுமிடத்தில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 42 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 75 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று கொல்லப்பட்ட அரசியல் தலைவரின் இறுதிச்சடங்கு மசூதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பங்கேற்ற அவரது உறவினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


--
http://thamilislam.blogspot.in

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails