Thursday, February 5, 2009

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் உத்தேசம் இல்லை – அமெரிக்கா

 
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குமாறு அமெரிக்க தமிழ் அமைப்பு விடுத்திருந்த வேண்டுகோள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தடை நீக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்கத் தமிழர் அமைப்பு புதிய ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களினால் சிவிலியன்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

No comments:

Post a Comment