Sunday, September 21, 2008

கர்நாடக பஜ்ரங் தளம் அமைப்பாளர் கைது

கர்நாடக பஜ்ரங் தளம் அமைப்பாளர் கைது
பஜ்ரங் தளத்தின் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தகவலை மேற்கு சரக துணை ஐ.ஜி. ஏ.எம். பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.செப்டம்பர் 15ம் தேதி, மங்களூர், உடுப்பி, சிக்மகளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இதில்,பஜ்ரங் தளம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

தேவாலயங்கள் மீதான தாக்குதல் தொடர்பாக கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு கடுமையாக எச்சரித்திருந்தது.இந்நிலையில்,அதன் மாநில அமைப்பாளர் மகேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1221925199&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment