Sunday, September 21, 2008

மத்திய அரசுக்கு பிஜேபி சவால்

மத்திய அரசுக்கு பிஜேபி சவால்
lankasri.comகிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ள நிலையில், துணிவிருந்தால் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி பார்க்கட்டும் என்று மத்திய அரசுக்கு பிஜேபி சவால் விடுத்துள்ளது.

"மத்திய அரசுக்கு துணிவிருந்தால் இன்னும் ஒருபடி மேலே சென்று அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை கர்நாடகாவில் பிரயோகம் செய்து பார்க்கட்டும். இதற்கான கடும் விளைவுகளை அவர்கள் ஏற்க வேண்டிவரும். நாட்டு மக்கள் அதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்"என்று பிஜேபி செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் புதுடெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடைபெறும் வன்முறைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
 
 
 
 

No comments:

Post a Comment