Monday, November 1, 2010

சிங்கங்களுடன் விளையாடும் மனிதன்

சிங்கங்களுடன் விளையாடும் கெவின்!

சிங்கம் என்றாலே கால் பிடறியில் பட ஓடுபவர்கள் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாம் கூட அப்படித்தானே? 

சர்க்கஸ் என்றால் சிங்கங்களைப் பயிற்றுவித்து அவற்றுடன் சாகசங்கள் புரிவார்கள். அதன்போதும் சில வேளைகளில் அனர்த்தங்கள் ஏற்படுவதுண்டு. 

அதுவல்லாமல், சிங்கத்தை நாம் நேரில் காண்போமானால் அச்ச உணர்வில் உறைந்து போய் விடுவோமல்லவா?

ஆனால் ஒருவர் சிங்கங்களுடன் குதூகலமாக விளையாடுகின்றார் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அவர் தான் கெவின் ரிச்சார்ட்சன். இவர் சர்வசாதாரணமாக சிங்கங்களுடன் விளையாடுகிறார்.

தென்னாபிரிக்காவின் ஜொஹார்ன்னஸ்பேர்கிலுள்ள வெள்ளைச் சிங்கங்களுக்கான சரணாலயத்திலேயே இவர் இவ்வாறு அவற்றுடன் விளையாடி வருகிறார்.



34 வயதான கெவின், தன்னை சிங்கங்களுக்கான தூதுவர் எனத் தெரிவிக்கின்றார்.

மேலும் இவர் ஜொஹார்ன்னஸ்பேர்கில் சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள் மற்றும் கழுதைகளுக்கான வன விலங்கு பூங்காவொன்றையும் நடத்தி வருகின்றார்.

"சிங்கங்களுடன் ஓர் இரவு முழுவதும் தங்கக்கூட முடியும்" என தெரிவிக்கின்றார் கெவின் ரிச்சார்ட்சன்.

அன்புக்கு மானிடர் மட்டுமல்ல, வன விலங்குகளும் அடிமைதான் என்கின்றாரோ இவர்?

















source:pathivu


--
http://thamilislam.tk

No comments:

Post a Comment