Tuesday, October 20, 2009

ஈரானில் தற்கொலைப் படை தாக்குதல்: சாவு 29


 

 


தெஹ்ரான், அக். 18:  ஈரானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், பழங்குடியினத் தலைவர்கள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்தனர்.

   பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பலூசிஸ்தான் மாகாணத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.  பிஷீன் பகுதியில் ஈரான் ராணுவ சிறப்புப் பிரிவு அதிகாரிகளின் கூட்டத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

   இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காதான் காரணம் என்று ஈரான் நாடாளுமன்றத் தலைவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

source:dinamani
--
www.thamilislam.co.cc

No comments:

Post a Comment