Tuesday, September 1, 2009

புலிகளின் அரசியல் துறையச்சார்ந்த பெண்போராளி கைது

புலிகளின் அரசியல் துறையச்சார்ந்த பெண்போராளி கைது என்கிறது அரசு
 

விடுதலைப் புலிகளின் அரசியல் துறையைச் சார்ந்த முக்கிய பெண் போராளி ஒருவரை தாம் கொழும்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்த வேளை கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் கணவரும் ஒரு போராளி எனவும் அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
கைதான பெண் போராளி புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் பணியாற்றியதாகக் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இவரை வெள்ளவத்தையில் வைத்து ஒரு விடுதியில் தாம் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர் என அதிர்வின் கொழும்பு நிருபர் தெரிவித்தார்.


source:ATHIRVU
--
www.thamilislam.co.cc

No comments:

Post a Comment