Monday, August 31, 2009

மாஜி போலீஸ் கமிஷனர் தேமுதிகவில் இணைந்தார்

 

 

சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பி.காளிமுத்து இன்று தேமுதிகவில் இணைந்தார்.
. 
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.காளிமுத்து. அவர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். 


அவரை விஜயகாந்த் வரவேற்று கட்சியில் இணைத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பா.பார்த்தசாரதி, கே. பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 



--
www.thamilislam.co.cc

No comments:

Post a Comment