Monday, August 3, 2009

கிறிஸ்தவர் வீடுகளுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தீ வைத்தனர்,ஒரு குழந்தை 4 பெண்கள் உள்பட 6 பேர் உடல் கருகி சாவு

 
 


லாகூர், ஆக.3-

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோஜ்ரா நகரில் வசிக்கும் கிறிஸ்தவர்களில் ஒருவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை அவமதித்து விட்டதாக வதந்தி வெளியானது. இதைதொடர்ந்து அந்த நகரில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தீ வைத்தனர். இதில் ஒரு குழந்தையும் 4 பெண்களும் உள்பட 6 பேர் பலியானார்கள். வீடுகளின் கூரைகளில் நின்றபடி மக்கள் ஒருவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதை டி.வி. காட்சிகளில் பார்க்க முடிந்தது. வீடுகள் தீ பற்றி எரிவதையும் டி.வி.யில் காட்சிகளாக பார்க்க முடிந்தது.

வன்முறைக்கு காரணமான வதந்தி பொய்யானது என்று சிறுபான்மை இன மக்களுக்கான மந்திரி ஷபாஸ் பட்டி தெரிவித்தார். மந்திரி கோஜ்ரா நகருக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்தார். அவர் போலீசார் கலவரத்தை ஒடுக்குவதில் அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.
 

No comments:

Post a Comment