Friday, June 5, 2009

அமெரிக்காவுடன் உறவை முறிக்க வேண்டும்; முஸ்லிம் நாடுகளுக்கு பின்லேடன் எச்சரிக்கை

 

துபாய், ஜுன்.5-

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஒபாமா, முதன் முறையாக முஸ்லிம் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எகிப்து நாட்டுக்கு நேற்று சென்ற அவர், `அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம்களுக்கு பங்கு உண்டு. முஸ்லிம்களுக்கு அமெரிக்கா எதிரானது அல்ல. அமெரிக்காவுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கு இடையே புதிய தொடக்கம் ஏற்பட வேண்டும்' என்று பேசினார்.
மத நம்பிக்கையற்றவர்கள் மற்றும் அவர்களுடைய ஏஜெண்டுகளுக்கு (மேற்கத்திய நாடுகள்) எதிரான நீண்ட கால போர் தொடருகிறது. மதநம்பிக்கையற்ற உலகத்துக்கு எதிரான போரில் உங்களை தியாகம் செய்ய வாருங்கள். இஸ்லாத்தின் வெளிச்சத்தில் நாம் வாழ வேண்டும் அல்லது நம் கவுரவமாக இறக்க வேண்டும். முஸ்லிம்கள் மத்தியில் வெறுப்பு விதைகளை ஒபாமா விதைத்து வருகிறார்.

இவ்வாறு அந்த கேசட்டில் பின்லேடன் தெரிவித்துள்ளான்.

No comments:

Post a Comment