Friday, January 2, 2009

இஸ்ரேல் தாக்குதல்: ஒபாமா மௌனத்துக்கு அரேபியர்கள் வருத்தம்

 
 
lankasri.com"மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு ஒபாமா கண்டனம் தெரிவித்தார். ஆனால்,இஸ்ரேல் தாக்குதல் குறித்து மௌனம் காத்து வருகிறார்" என்று அரபு நாட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து ஒபாமா தரப்பிடம் கேட்டபோது,மும்பை தாக்குதல் சம்பவம் பயங்கரவாதம் தொடர்புடையது,இஸ்ரேல் தாக்குதல் நாடுகள் தொடர்புடையது என்று பதில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமையும் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதுவரை 370-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும்,1,720 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1230799828&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment