Tuesday, December 23, 2008

அதிகாரி மரண சர்ச்சை சந்தேகம் தீர்ந்தது : அந்துலே

 

மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ் அதிகாரி கார்கரே கொல்லப்பட்டார்.  இந்த மரணத்தில் சதித்திட்டம் இருப்பதாக மத்திய அமைச்சர் அந்துலே குற்றஞ்சாட்டினார்.

இது சம்பந்தமாக விசாரணை நடந்தது.  விசாரணை முடிந்த பின் ,அதிகாரி கார்கரே மரணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து தனது முடிவை மாற்றீக்கொண்டிருக்கிறார் அந்துலே.  அது சமபந்தமாக அவர்,

''சதித்திட்டம் இருப்பதாக நான் சொல்லவில்லை.  விசாரனை செய்ய வேண்டும் என்றுதான் சொன்னேன்.  இப்போது விசாரனையும் முடிந்து விட்டது.

விசாரணை அறிக்கையை மத்திய அமைச்சர் சமர்ப்பித்திருக்கிறார்.  இனி அதிகாரி மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை.  இந்த பிரச்சனை இத்தோடு முடிந்து விட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=1295

No comments:

Post a Comment