Friday, December 19, 2008

இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் ராக்கெட் வீசித் தாக்குதல்

 
 
lankasri.comபோர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக ஹமாஸ் அமைப்பு அறிவித்ததையடுத்து பாலஸ்தீனிய தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது இன்று காலை இரு ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் யாருக்கும் பாதிப்பில்லை என இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.போர் நிறுத்தம் முடிந்துவிட்டது.இஸ்ரேல் போர் நிறுத்த நிபந்தனைகளை மதிக்காததால் அதைப் புதுப்பிக்க முடியாது என ஹமாஸ் அமைப்பு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1229678286&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment