Sunday, November 9, 2008

இந்தோனேசியாவில் பாலி குண்டுவெடிப்பு குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றம்

 
 
lankasri.comபாலி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மூன்று பேரின் மரண தண்டனை இந்தோனேசியாவில் இன்று நிறைவேற்றப்பட்டது.ஜெமா இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்த இமாம் சாமுத்ரா,முஹ்லாஸ் மற்றும் அம்ரோஸி ஆகியோரின் மரண தண்டனை மத்திய ஜாவாவில் உள்ள நுஸகம்பாங்கன் தீவில் இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது.

இதனை இந்தோனேசிய அட்டார்னி ஜெனரல் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜஸ்மன் பாஞ்ஜய்தன் தெரிவித்தார்.

இதனிடையே பாலி குண்டுவெடிப்பு குற்றவாளிகளின் மரண நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது ஆதரவாளர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே பல்வேறு பகுதிகளில் மோதல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2002-ஆம் ஆண்டு பாலித் தீவில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 88-ஆஸ்திரேலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

 

 

No comments:

Post a Comment