Friday, November 7, 2008

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீன தீவிரவாதிகள் 35ராக்கெட்டுகளை வீசி தாக்கினார்கள்

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீன தீவிரவாதிகள் 35ராக்கெட்டுகளை வீசி தாக்கினார்கள்
 
lankasri.comபாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது 35ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6தீவிரவாதிகள் பலியானார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் தீவிரவாதிகளின் ராக்கெட்டு தாக்குதல் நடந்தது.இந்த ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேல் பகுதியின் மீது விழுந்தது. இதனால் எந்த சேதமும் இல்லை என்றும் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்று உள்ளனர்.

எகிப்து நாட்டின் முயற்சியின் பேரில் கடந்த ஜுன் மாதம் 19-ந்தேதி முதல் அங்கு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்து வருகிறது.அதை மீறி இப்போது தாக்குதல் நடந்து உள்ளது.

 

 

No comments:

Post a Comment