Monday, October 6, 2008

ஒரிசா,கர்நாடகாவில் கட்டாய மத மாற்றமே கலவரத்துக்கு காரணம்;நரேந்திரமோடி புகார்

யோக்கியவான் சொல்லுகிறார் கேளூங்கோ?அப்பாவிகளை கொல்லுவதீல் தனித்திறமை கொண்டவர் அல்லவா இவர்.
lankasri.comகுஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி ஒரிசா, கர் நாடக மதகலவரம் பற்றி தனது கருத்தை வெளியிட்டு உள்ளார்.அவர் கூறியதாவது:-எந்த ஒரு அமைப்பு சட்டத்தை மீறினாலும் அது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.அந்த பிரச்சினைக்கு வேர் எது? என்பதை கண்டறிந்து அதை தடுக்க வேண்டும்.

ஒரிசா, கர்நாடக மதகல வரத்துக்கு அங்கு நடக்கும் கட்டாய மத மாற்றமே காரணமாக உள்ளது.மத மாற்றத்துக்கு மகாத்மா காந்தி கடுமையா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வழியை பின்பற்றி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். மத மாற்றத்துக்கு உதவுவதற்காக வெளிநாடு களில் இருந்து கிறிஸ்தவ பிரசார அமைப்புகள் ஏராளமாக பணம் அனுப்புகின்றன. இவற்றை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் அவர்களை ஒடுக்க முடியும்.இதில் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடித்தாலும் அது ஆபத்தாக முடியும்.

இவ்வாறு மோடி கூறினார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223287590&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment