Saturday, October 11, 2008

முதல் டெஸ்ட்:இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313

lankasri.comஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.மழை காரணமாக ஆட்டம் இடையில் தடைபட்டது.முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 430 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்திருந்தது.

திராவிட் 51 ரன்களும் ஷேவாக் 45 ரன்களும் எடுத்தனர்.கங்குலி 47 ரன்களும் எம்.எஸ்.தோனி 9 ரன்களும் எடுத்தனர்.ஹர்பஜன் சிங் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜாகீர்கான் 35ரன்களுடனும் அனில் கும்ப்ளே ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223731648&archive=&start_from=&ucat=4&

No comments:

Post a Comment