Wednesday, October 1, 2008

ஈராக் : குண்டு வெடிப்பில் 33 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 33 பேர் பலியானார்கள்.

முதல் குண்டு பாக்தாத்தையடுத்துள்ள ஷுர்தா என்ற இடத்தில் இருக்கும் மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்சில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர் ; 35 பேர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஹய் - அல் - அமில் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்; மற்றொருவர் காயமடைந்தார்.

அதனையடுத்து மூன்றாவதாக கர்ராடா மாவட்டத்தின் மையப் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர் ; 72 பேர் காயமடைந்ததாக பாக்தாத் உயர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Post a Comment