Thursday, August 7, 2008

கிறிஸ்தவ மதத்துக்கு சீனா வழி விட வேண்டும்: போப் வேண்டுகோள்

 

கிறிஸ்தவ மதத்துக்கு சீனா வழி விட வேண்டும்: போப் வேண்டுகோள்

ரோம், ஆக. 6: கிறிஸ்தவ மதம் சீனாவில் பரவுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டை போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதால், அங்குள்ள கத்தோலிக்கர்கள் வாடிகனுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என 1951-லேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மீறுபவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவதும் தண்டிக்கப்படுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நிழ்ச்சி ஒன்றில் பேசிய போப்பாண்டவர், ஒரு பெரிய நாடு என்ற முறையில், ஏசு கிறிஸ்துவின் போதனைகள் பரவ சீனா அனுமதிக்க வேண்டும் என்றார். சீனாவுடன் உறவை மேம்படுத்துவது தமது இலக்குகளுள் முக்கியமானது என்றார் போப்பாண்டவர்.

 

 

http://satrumun.com/2008/08/06/கிறிஸ்தவ-மதத்துக்கு-சீனா/

No comments:

Post a Comment