Friday, August 15, 2008

லெபனானில் குண்டு வெடிப்பு : 18 பேர் பலி

லெபனானில் குண்டு வெடிப்பு : 18 பேர் பலி
லெபனானில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் பலியானார்கள்.

லெபனானில் உள்ள டிரிபோலி எனும் நகரின் வடக்குப் பகுதியில் இன்று காலை பயணிகள் மற்றும் ராணுவத்தினரை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது தெரு விளக்கு கம்பம் ஒன்று அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு மிகுந்த சபதத்துடன் வெடித்து சிதறியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் பலியானார்கள்; 46பேர் காயமடைந்தனர்.உயிரிழந்தவர்களில் 10 பேர் ராணுவ வீரர்களாவர்.

அல் - காய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



(மூலம் - வெப்துனியா)

No comments:

Post a Comment