Friday, November 28, 2008

மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர்- தளபதிகள் முதன்மைச் சுடரேற்றி வணக்கம்

 


தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களும் முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர் நாள் உரையை இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5:40 நிமிடத்துக்கு நிகழ்த்தினார். தொடர்ந்து மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் தூயவேளை 6.05 நிமிடத்துக்கு நினைவொலி எழுப்பல் மூலம் தொடங்கியது. எங்கும் எழுப்பப்பட்ட நினைவொலியில் மாவீரர்களின் வீரம் ஒலித்து தாய் மண்ணை நிரப்பியது.

தொடர்ந்து 6.06 நிமிடத்துக்கு மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 6.07 நிமிடத்துக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர்களுக்கான முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தினார். சமவேளையில் மாவீரர் துயிலுமில்லங்கள், மாதிரி மாவீரர் துயிலுமில்லங்கள், மாவீரர் மண்டபங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முதன்மைச்சுடர்களை ஏற்றினர். அதேவேளை, மக்களும் சுடர்களை ஏற்றி எங்கள் தாயக விடுதலைக்காக தம்மை ஈந்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். மக்களின் வீடுகளிலும் சுடர்களை ஏற்றப்பட்டன. சிறிலங்கா படை வல்வளைப்புப் பகுதிகளில் மக்கள் தமது அகங்களில் சுடர்களை ஏற்றினர். இதேவேளை, புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் மாவீரர்களுக்கு நினைவொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர்கள் ஏற்றப்பட்டன.

கிளிநொச்சி நகர் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் தீபன்

மட்டக்களப்பில் தரவை துயிலுமில்லத்துக்கு தளபதி உமாராம் தாண்டியடி துயிலுமில்லத்துக்கு மாவடி மும்மாரிக் கோட்ட படையப் பொறுப்பாளர் கலைமருதன் மாவடி மும்மாரியில் மாவடி மும்மாரிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பொன்மதன் வாகரைப்பகுதியில் ஆண்டாங்குளம் துயிலுமில்லத்துக்கு ஆண்டான்குளம் கோட்டப் படையப் பொறுப்பாளர் புஸ்பன் கரடியனாற்றுப் பகுதியில் கரடியனாற்று கோட்ட படையப் பொறுப்பாளர் மோகன் ஆகியோர் முதன்மைச்சுடர்களை ஏற்றினர். விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத்தளபதி கீர்த்தி

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் சொர்ணம்

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத்தளபதி பூரணி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் முல்லைத்தீவு கடலில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை வட்டக்கச்சி மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் கண்டாவளை மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி சிறப்புத்தளபதி விமல்
உடையார்கட்டு மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் படைய தொடக்கப் பயிற்சிக்கல்லூரி சிறப்புத்தளபதி கேணல் ஆதவன் புதுக்குடியிருப்பு மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழ்க்குமரன் ஒட்டுசுட்டான் மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் ஜெயம் மட்டக்களப்பு-அம்பாறை மாவீரர் மண்டபத்தில் ஜெயந்தன் படையணி ஆளுகைப் பொறுப்பாளர் பவான் இம்ரான்-பாண்டியன் படையணி மாவீரர் மண்டபத்தில் கிளிநொச்சி கட்டளைத்தளபதி வேலவன் லெப். கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி மாவீரர் மண்டபத்தில் படையணி நிர்வாகப் பொறுப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் முதன்மைச்சுடர்களை ஏற்றினர்.

சிறிலங்கா படை வல்வளைப்பால் தமது மண்ணை இழந்து இடம்பெயர்ந்த மக்கள் மாதிரி மாவீரர் துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்காக உணர்வெழுச்சியுடன் சுடர்களை ஏற்றி வழிபட்டனர். தாய்மண்ணில் தமது உறவுகளுக்கு சுடர்களை ஏற்ற வேண்டும் என்ற உறுதியை எடுத்து அவர்கள் மாவீரர்களின் உணர்வில் கலந்திருந்தனர். சுடர்களின் ஒளியில் மாவீரர்களின் ஈகம் சுடர்விட்டது. கிளிநொச்சி நகரினை இன்று கைப்பற்றி தமது சிங்கக்கொடியினை ஏற்றுவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு திடசங்கற்பம் பூண்டு கடந்த சில நாட்களாக கடுமையாக பல முன்நகர்வு முயற்சிகளினை மேற்கொண்டிருந்தது.

இம் முயற்சிகள் யாவற்றினையும் விடுதலைப் புலிகள் முறியடித்து புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் முதன்மைச் சுடரினை ஏற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com



http://www.tamilmann.com

"மினி சுனாமி"!:கடலூர் முதல் நாகை வரை புயல் கோர தாண்டவம்


 
 
 
கடலோர மாவட்டங்களை கடந்த நான்கு நாட்களாக அச்சுறுத்தி வந்த புயல் நிஷா, நேற்று காரைக்கால் அருகே கரையைக் கடந்தது. புயலின் தாக்குதலால், கடலூர், நாகை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. புதுச்சேரி மாநிலமும் திக்குமுக்காடியது.

சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை, கடலில் "மினி சுனாமியை'" ஏற்படுத்தியதால், 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது; ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கின.

நாகப்பட்டினம் அருகே மையம் கொண்டிருந்த புயல் நேற்று முன்தினம் காலை வேதாரண்யம்-நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடலூர்-நாகப்பட்டினம் இடையே நேற்று மாலை கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இதனால், மாலை முதல் கடும் சூறாவளிக் காற்று வீசத் துவங்கியது.

கடலூரை புயல் தாக்கும் என்பதால், துறைமுகத்தில் எச்சரிக்கை கொடி எண் ஏழு ஏற்றப்பட்டது. மாலையில் 60 முதல் 70 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. காரைக்கால் அருகே நேற்று காலை புயல் கரையைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கடலூரில் காலை 9 மணியிலிருந்து அதிகபட்ச வேகத்துடன் சூறாவளி வீசியது.

இது, பிற்பகல் வரை நீடித்தது. புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றமாகக் காணப்பட்டது. கெடிலம், உப்பனாறு, பெண்ணையாற்றில் ஓடி வரும் வெள்ள நீரை கடலில் வடிய வைப்பதற்காக முகத்துவாரம் திறந்து விட்ட போதிலும், கடல் நீர் வடிவதற்கு பதிலாக எதிர்த்து வந்தது. இதனால், மழை நீர் கடலில் வடியாமல் கிராமங்களுக்குள் புகுந்தன.

கடந்த 25ம் தேதி மதியத்திலிருந்து மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் இல்லாததால் மொபைல் போன் சார்ஜ் போட முடியாமல் தகவல் பரிமாற்றம் அடியோடு பாதிக்கப்பட்டது.

நிஷா புயலையொட்டி, கடலூர் மாவட்ட கடலோரப் பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த நான்கு நாட்களாக புவனகிரியில் 70.4 செ.மீ., சிதம்பரத்தில் 67.1, அண்ணாமலை நகர் 58.3, பரங்கிப்பேட்டை 67.3, சேத்தியாதோப்பு 60.5, கடலூர் 48.2, லால்பேட்டை 64.4, கொத்தவாச்சேரி 65.2 செ.மீ., மழை பெய்துள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், கடலூர் தாலுகாக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 300 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

வீராணம் அருகில் உள்ள திருநாரையூர், வீரநத்தம், மேலவன்னியூர், சிறகிழந்த நல்லூர் கிராமங்களில் சாலையிலேயே 4 அடி உயரம் தண்ணீர் ஓடுகிறது. தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்களில் இருந்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக திருமண நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்படுகிறது.

கடலூர்-சிதம்பரம், சிதம்பரம்-காட்டுமன்னார் கோவில், சிதம்பரம்-சீர்காழி, சிதம்பரம்-திருச்சி சாலைகளில் அதிகளவாக தண்ணீர் ஓடுவதாலும், சாலை உடைப்பெடுத்ததாலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, சிதம்பரத்திற்கு போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் தனித் தீவு போல் துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழைக்கு இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்; 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன.

மிரண்டது நாகை: நாகையில் நேற்று மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது. 2004ல் சுனாமி ஏற்பட்ட போது, நாகையில் தான் அதிகபட்சமாக 5,000 பேர் உயிரிழந்தனர். தற்போது "மினி சுனாமி" ஏற்பட்டுள்ளது போல் சூழ்ந்துள்ள வெள்ளப் பெருக்கால், மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு நாகை மாவட்டம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிசைகளை இழுந்து நிற்கின்றனர்.

கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போய்விட்டது. நகரப் பகுதிகளில் திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களில் தங்கியிருக்கும் மக்களை சுற்றி சுற்றி வந்து நலம் விசாரிக்கும் அரசு அதிகாரிகள் வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமப் பகுதிகளை பார்வையிடாதது மக்களை குமுற வைத்துள்ளது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஒரு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பா பயிர்கள் வடிகால் வசதியின்றி நீரில் மூழ்கியுள்ளன.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1227862096&archive=&start_from=&ucat=1&
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails